மாவட்ட செய்திகள் நவம்பர் 24,2022 | 00:00 IST
சென்னை, திருநின்றவூர் ஏஞ்சல் பள்ளித் தாளாளர் வினோத். பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரை போலீசார் ஏற்கவில்லை. இதனால், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாளாளரை கைது செய்ய கோஷம் எழுப்பினர். சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். போலீஸ் அவர்களைத் தடுத்து, அப்புறப்படுத்தியது. தீவிர விசாரணைக்குப் பிறகு, பள்ளித் தாளாளர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை பெற்றோர்களும், மாணவர்களும் கைவிட்டனர்.
வாசகர் கருத்து