மாவட்ட செய்திகள் நவம்பர் 28,2022 | 13:44 IST
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 84 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் கோவிட்டில் இருந்து மீளாத 12 கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. அவகாசம் கேட்டனர். நகராட்சி அவகாசம் தராமல் முன்னறிவிப்பின்றி சீல் வைத்தது. கடைகளுக்கு சீல் வைத்ததையும், கடைகள் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சியை கண்டித்தும் கடைகளையும் அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து