மாவட்ட செய்திகள் ஜனவரி 20,2023 | 13:46 IST
கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல வனத்துறை நுழைவு கட்டணம் வசூல் செய்கிறது. இந்நிலையில் நுழைவு கட்டண சீட்டுகளை வழங்கும் மெஷின் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. விசாரணையில், முன்னாள் போளுவாம்பட்டி சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன், கடந்த 2021-ல் இருந்து வனவர் ராஜேஷ்குமார் போலி சீட்டுகளை வழங்கி, பல லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவிட்டார். அவரிடமிருந்து 35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து