Advertisement

சேற்று புதை குழி ஆற்றை கடந்து இறந்தவர்களை புதைக்கும் அவலம்

மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 16:35 IST

Share

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கோவிந்தனூரில் சுமார் 100 தலித் குடும்பங்கள் உள்ளனர். இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவிந்தனூர் ராமசாமி என்பவர் இறந்தார். சேறும், சகதியுமான ஆற்றைக் கடந்து சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்று தான் அடக்கம் செய்யும் நிலை உள்ளது. பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தர கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X