Advertisement

பயிர் காப்பீட்டை தாமதமின்றி வழங்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மாவட்ட செய்திகள் பிப்ரவரி 07,2023 | 18:28 IST

Share

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் முழ்கியது. விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு அரசு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் , உளுந்து, கடலைப் பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி, நீடாமங்கலம் விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X