மாவட்ட செய்திகள் மார்ச் 01,2023 | 21:15 IST
தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம், இந்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் தேவார பாடல்கள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கரந்தை தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. தென்னகப் பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன், கரந்தை தமிழ் சங்க செயலாளர் சுந்தரவதனம், கரந்தை உமா மகேஸ்வரனார் கலைக்கல்லூரி முதல்வர் ராஜாமணி தொடங்கி வைத்தனர். மாணவர்களுக்கு தேவார திருவாசக புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பயிற்சி வகுப்புகள் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாம் வாரத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கிறது. திருமுறை ஓதுவார் சிவனேசன் தேவார பாடல் பயிற்சி அளித்தார்.
வாசகர் கருத்து