சிறப்பு தொகுப்புகள் மார்ச் 09,2023 | 16:28 IST
செம்பரம்பாக்கத்தில் புறப்பட்டு, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணாசாலை, பிராட்வே வழியாக இயக்கப்படுகிறது. சென்னையில் முதல்கட்டமாக 500 தனியார் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் - பிராட்வே வழிதடத்தில் கலைவாணி நிறுவனம், 70 ஆண்டுகளாக இயக்கி வரும் பஸ்சை சென்னைவாசிகள் பலர் பார்த்து இருக்கலாம். நகரத்தில் இந்த ஒரே ஒரு தனியார் பஸ்க்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது தெரியுமா ? 1970 களில் தொலை தூர பஸ்களை இயக்கி வந்த சில தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பார்த்தன. எனவே 1972ல் அப்போதைய திமுக அரசு, தனியார் பஸ்களை அரசு உடமை ஆக்கியது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த நடவடிக்கை எடுத்ததில்லை. தமிழகத்தில் தான் முதல் முறை.
வாசகர் கருத்து