Advertisement

திருவிழாவில் ஆபாச நடனம் முகம் சுளித்த பெண்கள்

மாவட்ட செய்திகள் மே 30,2023 | 14:54 IST

Share

திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டியை அடுத்த கிராமம் பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி. அம்மன் கோயில் திருவிழா கடந்த 25 ம் தேதி நடந்தது. இரவு ைஹக்கோர்ட் அனுமதி பெற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேடையில் ஆடிய குழுவினர் கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடினர். நடனத்தை அங்கிருந்த பெண்கள் குழந்தைகள் பார்த்து முகம் சுழித்தனர். நடன நிகழ்ச்சியை இளைஞர்கள் வீடியோ எடுத்தனர். தமிழ் நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதனிடம் புகார் கொடுத்தனர். புகார் மனுவில் கோர்ட் உத்தரவை மீறி ஆபாச நடனம் ஆடியவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X