மாவட்ட செய்திகள் மே 30,2023 | 17:06 IST
திருப்பத்தூர், கிருஷ்ணாபுரத்தில் எருது விடும் விழா நடந்தது. சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்றனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர்.
வாசகர் கருத்து