மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 16:17 IST
நாமக்கல் மாவட்டம், கெடமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் போலீசார் கெடமலையில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது கண்டு கெடமலையை சேர்ந்த வெள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய உபகரணங்களை அழித்தனர்.
வாசகர் கருத்து