மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 13:54 IST
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் குடும்பங்களில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த திருமணங்கள் தொடர்பாக வழக்கு பதிந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தை திருமணங்கள் தொடர்கிறது. இங்கு குழந்தை திருமணங்கள் நடக்கவில்லை என்ற கவர்னர் கருத்து தெரிவித்திருப்பது இந்திய அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழக அரசு சிதம்பரத்தில் தீட்சிதர் குடும்பங்களின் குழந்தை திருமணங்களை நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைத்திட வேண்டும் வலியுறுத்தி மா. கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வாசகர் கருத்து