மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 13:19 IST
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா, வயது 38. மகள், மகன் உள்ளனர். செவ்வாய் மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கொம்பாடி கண்மாயில் துணி துவைத்து கொண்டிருந்த தேவிகா மழை பெய்ததால் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் உடல் கருகி ஸ்பாட்டிலேயே பலியானார். பெருங்குடி போலீசார் விசாரிக்கின்றனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து