மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வேங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த 4 ம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி பூஜை, கோ பூஜை, லெஷ்மி பூஜை, நாடிஸந்தானம், ஸ்பரிஷாஹீத், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று காலை யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடனது. கோயிலை வலம் வந்து கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முத்துமாரிஅம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்ப பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து