மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 13:22 IST
உலக வன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கோவை மாவட்ட வனத்துறை மற்றும் அரசு கல்லூரி இணைந்து "Protect Forest for Better Future" என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வன நாள் குறித்தும், வனங்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி மைதானத்தில் வன நாளை முன்னிட்டு கலெக்டர், கோவை மாவட்ட வனத்துறை அலுவலர், கல்லூரி முதல்வர் மரக்கன்றுகளை நட்டனர்.
வாசகர் கருத்து