ஏஐ மூலம் வரையப்பட்ட பூனையார் குடும்பத்தின் மெர்சலான படம்!
'ஏஐ' எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் வரையப்படும் படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஜெயேஷ் சச்தேவ் என்பவர் ஏஐ மூலம் வடிவமைக்கும் படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் நாய்கள், குரங்குகள், பூனைகள், பச்சோந்திகள் போன்ற உயிரினங்கள் இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் எப்படி இருக்கும் என ஏஐ-யை வைத்துக் வடிவமைத்துள்ளார்.
ஏஐயை பயன்படுத்தி கற்பனையாக விண்வெளி வீராங்கனைகளை மணக்கோலத்தில் வடிவமைத்து இதில் குறிப்பிடும்படியானது.
அதில் அவர் விவரித்த வெள்ளை நிற பூக்கள், விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட், இந்தியாவின் பாரம்பரிய நகைகள், போன்றவை அவரது படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
மிக்கி மவுஸிற்கு இந்தியாவில் திருமணம் நடந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
புதிய அனுபவமாக அமையும் இப்புகைப்படங்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ் குவிக்கின்றன.