சிறுவர்களுக்கு பிடித்த..மொறு மொறு பன்னீர் பாப்கார்ன்!
பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ½ கப் ரொட்டித் தூள், தேவையான அளவு உப்பு, ½ டீஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் ¼ கப் மைதா அல்லது நீங்கள் விரும்பிய மாவைக் கொட்டவும்.
அதில் 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு, ½ டீஸ்பூன் மிளகு தூள், ¾ டீஸ்பூன் கரம் மசாலா, 1 ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர், அதில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக கலக்கவும். அந்தக் கலவையில் வெட்டி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து கிளறவும். பன்னீரில் மசாலா நன்றாக ஒட்டி இருக்க வேண்டும்.
பிறகு பன்னீரை ரொட்டித்தூளில் போட்டு பிரட்டவும்.
இதை 15 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பன்னீரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் பன்னீர் பாப்கார்ன் தயார்.