sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்; சீனா அறிவிப்பு

/

பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்; சீனா அறிவிப்பு

பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்; சீனா அறிவிப்பு

பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்; சீனா அறிவிப்பு

29


UPDATED : மே 09, 2025 04:34 PM

ADDED : மே 09, 2025 12:00 PM

Google News

UPDATED : மே 09, 2025 04:34 PM ADDED : மே 09, 2025 12:00 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: ''இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்'' என சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை நேற்று நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம். நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து சீனா கவலை கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகள் ஆகும். சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதியை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய பதட்டங்களைத் தணிப்பதில் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us