உள்ளடக்கத்திற்கு செல்ல
விவாகரத்து பெற்ற மனைவி வன்கொடுமை வழக்கு போட முடியுமா?
விவாகரத்து பெற்ற மனைவி வன்கொடுமை வழக்கு போட முடியுமா?
UPDATED : ஜூலை 26, 2026 05:10 PM
ADDED : ஜூலை 18, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
கணவன்-மனைவி உறவு சீர்படுத்தமுடியாத அளவிற்கு சிதைந்து விட்டது என்ற காரணத்திற்காக விவாகரத்து கோர முடியுமா?
பதில் : சட்டப்படி முடியாது. இருப்பினும், இருவரும் தனிதனியாக வாழ்ந்துவரும் நிலையில், பெயரளவில் திருமண உறவு மட்டும் தொடர செய்து , இருவர் அனுபவிக்கும் மனவேதனையை சட்டத்தை காட்டி நீட்டிக்க அவசியம் இல்லை என்று கூறி சுப்ரீம் கோர்ட் விவாகரத்து வழங்கியுள்ளது.
கேள்வி : விவாகரத்து பெற்ற பிறகு, கணவன் மீது மனைவி குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்ய முடியுமா?
பதில் : சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நடந்த வன்முறைக்காக, விவாகரத்துக்கு பிறகும் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
- வக்கீல் ஆர்.சண்முகம், ரேஸ்கோர்ஸ்
