இன்று உலக சுகாதார தினம்!
சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்.7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் 1948 ஏப்.7ல் நிறுவப்பட்டது. இந்நாளே உலக சுகாதார தினமாக உருவாக்கப்பட்டது.
உலகில் ஆண்டுதோறும் 3 லட்சம் பெண்கள், பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள் உயிர்இழக்கின்றனர்.
எனவே பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான வீடு, நல்ல வேலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அகியவற்றையும் வலியுறுத்துகிறது.
குறிப்பாக அனைவருக்கும் தேவையான சுகாதார வசதிகள் கிடைப்பது, அவர்களுக்கு இருக்கும் சலுகை கிடையாது உரிமை என்பதை இந்த நாள் முன்னிறுத்துகிறது.