பொங்கலுக்கு தள்ளிப்போன ‛அயலான்' படம்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'.

ஏலியன் தொடர்பான கதையை மையமாக வைத்து சயின்ஸ் பிக் ஷன் படமாக தயாராகி வருகிறது.

இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

3 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் உள்ளது. வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.

ஆனால் பட பணிகள் முடியாததால் தள்ளிப்போவதாக ஒருவாரமாகவே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ‛அயலான்' படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

படத்தில் கிராபிக்ஸ் தொடர்பான பணிகள் அதிகளவில் உள்ளதாம். அந்த பணிகள் முடியாததால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

‛அயலான் பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது. உங்கள் மேலான ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறோம். நிச்சயம் அயலான் உங்களை மகிழ்விப்பான் - இயக்குரனர் ரவிக்குமார்