இன்று உலக எய்ட்ஸ் நோய் தினம்!
பொதுவாக, 16 முதல், 32 வயது பிரிவினருக்கு தான் எச்.ஐ.வி., பாதிப்பு
அதிகம் ஏற்படுகிறது. எச்.ஐ.வி., பொறுத்த வரை வயது ஒரு பொருட்டல்ல.
எச்.ஐ.வி., ஒரு வைரஸ்; அதன் முற்றிய நிலையே எய்ட்ஸ். வைரஸ் பாதித்த நாளில் இருந்தே, கட்டாயம் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வைரஸ் உடலுக்குள் வந்து விட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, வைரஸில் இருந்து மீண்டு வர வழியில்லை.
எனவே, முடிந்த வரை பாதுகாப்புடன் வாழ வேண்டும். 'தேவையற்ற' பழக்க வழக்கம், பாதுகாப்பில்லாத உடல் உறவே எச்.ஐ.வி.,க்கு ஆரம்ப காரணமாக உள்ளது.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று எய்ட்ஸ். 2030க்குள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது.
உலகில் 2022ன்படி, 4 கோடி பேர் எய்ட்ஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர். இதில் 2022ல் மட்டும் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 6.30 லட்சம் பேர் பலியாகினர்.
'சரியான பாதையில் செல்லுங்கள் எனது ஆரோக்கியம், எனது உரிமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.