குளிர் காலத்தில் எந்த மாதிரி உணவை எடுத்துக்கொள்ளலாம்!

இது மழைக் காலம்; குளிரும் அதிக அளவில் இருக்கிறது. இது போன்ற சமயங்களில், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றாக பசிக்கிற நேரத்திலும், வழக்கமாக சாப்பிடும் அளவை விடவும், குறைந்த அளவு உணவையே சாப்பிட வேண்டும்.

இரண்டாவது விஷயம், ஒவ்வாமை பிரச்னைகள், மூட்டுகளில் வலி, குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும்.

வாதத்தை அதிகரிக்கும் வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிடுவதை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

குளிர், மழைக் காலத்தில் சமைக்கும் எல்லா உணவுகளிலும், மிளகு சேர்த்து சமைப்பது அவசியம்.

புளித்த மோர், தயிர், எலுமிச்சை உட்பட சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ள பழங்கள், புளி இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு சாப்பிட்டவுடன் 'ரிப்ளெக்ஸ்' எனப்படும் எதுக்களிப்பு வரலாம்.

எல்லா நேரத்திலும் வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர், செரிமானத்திற்கும், உடம்பில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.