வாயுப் பிடிப்பு பிரச்னையா? இதோ சில தீர்வுகள்!!
அதீத கொழுப்பு, மாவு, வெற்று கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிடும்போது செரிமானம் தாமதமாவதுடன் செரிமான வாயுவின் அளவும் அதிகரிக்கும்
செரிமானத்தில் கோளாறு உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது, காற்று அதிகமாக உடலில் உருவாகி, தொல்லையை தருகிறது.
வேலை பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான், வாயுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணம். வாயு தொல்லையிலிருந்து விடுபட என்ன சாப்பிடலாம் என தெரிந்துகொள்வோம்.
மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச்சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன், இவைகளை வெறும் வாயில் மென்றால், உடனே நல்ல பலன் கிடைக்கும்.
அமில உற்பத்தியை தடுக்கிறது, புதினா. வாயுவால் அவதியுறும்போது, புதினா இலைகளை மென்றால், நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால், விரைவில் பலன் கிடைக்கும்.
தேங்காய் துருவலை சாப்பிடலாம். தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாயுத் தொல்லை குணமாகிறது. மேலும், இவை அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்.
வாயு உருவாகும் சமயங்களில், ஒரு துண்டு பப்பாளியை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது, வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக துாண்டுவதால், வாயு தடுக்கப்படுகிறது.