எச்.எம்.பி.வி., தொற்று... முன்னெச்சரிக்கையாக இருக்கணும் !
அண்டை நாடான சீனாவில், எச்.எம்.பி.வி., என்ற ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ் பரவல் சமீபத்தில் அதிகரித்தது.
நுரையீரலை தாக்கி சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த வகை தொற்று, குழந்தைகள் மற்றும் முதியோரை எளிதில் தாக்குகிறது.
தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத்தில் இதுவரை ஐந்து குழந்தைகளுக்கு, எச்.எம்.பி.வி., தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைவரையும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு , அரசு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, சோப் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். அபரிதமான விதத்தில் எச்.எம்.பி.வி., தொற்று அதிகரிக்கவில்லை.
2001 முதல் உலகம் முழுவதுமுள்ள தொற்று என்பதால் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை எச்.எம்.பி.வி., வைரஸ் பாதிப்புக்கு அறிகுறிகளாகும்.
சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் பிற வைரஸ்கள் போன்றது தான். தொற்று பரவலை நினைத்து, மக்கள் கவலையடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.