இந்த பருவமழை சீசனில் இந்தியாவில் மனதை அள்ளும் நீர்வீழ்ச்சிகள் சில!

கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது ஷராவதி ஆற்றிலிருந்து பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக ஆர்பரித்து கொட்டுகிறது.

கோவாவில் மேற்குத்தொடர்ச்சி மலையில் மாண்டோவி ஆற்றிலிருந்து கொட்டுகிறது துத்சாகர் நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகு மிகவும் பிரபலமாகும்.

இயற்கை எழிலுடன் கூடிய அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி கேரளாவின் மிகப்பெரிய அருவியாகும். அடிக்கடி இங்கு பட சூட்டிங்கள் நடக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மேகாலயாவின், சிரபுஞ்சியில் உள்ள நொகாலிகாய் நீர்வீழ்ச்சி, செங்குத்தான பாறைகள், பச்சைப்பசேலென அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, 1,100 அடி உயரத்திலிருந்து தண்ணீர் விழுவது ஒருகணம் மூச்சடைக்க வைக்கும்.

மருத்துவக் குளியல் மற்றும் பாரம்பரிய பரிசல் படகுச்சவாரிக்கு பிரபலமானது தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி.

இந்தியாவின் நயாகரா என சத்தீஸ்கரில் உள்ள சித்ரகோட் நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. மழைக்காலத்தில் தண்ணீர் கொட்டும் அழகு பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. தண்ணீரில் உள்ள மூலிகைகளின் மருத்துவத்தன்மை காரணமாக, 'மருத்துவ ஸ்பா' என அழைக்கப்படுகிறது.