வெந்தயத்தின் மருத்துவ நன்மைகள் இதோ!

உணவில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியை அளிப்பதுடன், இதிலுள்ள மருத்துவக்குணங்கள் நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, சோடியம், பொட்டாசியம், தயமின், நிகோடினிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை குடித்தால், அஜீரண கோளாறில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஊற வைத்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தை சாப்பிட நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சிறிதளவு பெருங்காயம் மற்றும் வெந்தயப்பொடியை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது மோரில் போட்டு பருகி வர, வாய்வு, பொருமல் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் நீங்கும்.

வாரம் ஒருமுறை வெந்தயத்தை மோரில் ஊற வைத்து சாப்பிட உடல் சூடு மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.