தேமல் பிரச்னையா… விரட்ட சில டிப்ஸ்…
தேமல் என்பது தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நோய்களில் ஒன்று. மலேசேசியாஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த தொற்று வருகிறது.
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. தேமல் தொற்று உள்ளவரின் ஆடை, சோப், வியர்வை உள்ளிட்டவை வழியாக எளிதில் பரவுகிறது.
மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில், தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட,வட்டமாக வரக்கூடும்.
வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும், நீரிழிவு, ஸ்டீராய்டு அதிகம் எடுத்து கொள்பவர்கள், நோய்எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்த தேமல் தொல்லை கொடுக்கும்.
வியர்வை அதிகம் சுரக்கும் சருமத்தை கொண்ட நபர்கள் தினமும் இரு வேளை கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு குளிக்க வேண்டும்.
தேமலுக்கு சரும டாக்டர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான மருத்துவ சோப்பை பயன்படுத்த வேண்டும்.
துளசி இலைகளை பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவினால் மறையும்.
ஒரு கப் நீரில் வேப்பிலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், தேமல் பிரச்னை குறையும்.