தினமும் 4,000 ஸ்டெப்ஸ் நடந்தால்... மரணத்தை தள்ளி போடலாம்!

தினமும் 4,000 அடிகள் நடப்போர், மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, தினமும் 2,337 அடிகள் நடப்பது, அதாவது 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியமானது.

மிகவும் முக்கியமான ஒன்று, இளம்வயதில் ஏற்படும் மரணத்தை தடுக்க, தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதோருக்கு, டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது.

எனவே, நடையை அதிகரிக்க, லிப்ட் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மாடிப்படிகளில் நடந்து செல்லலாம்.

பார்க்கிங்கில் வாகனங்களை சற்று தூரமாக நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்கு நடந்து செல்லலாம்.

மொபைல் போனில் பேசும் நேரங்களில், சற்று நடக்க முயற்சிக்கலாம்.

மதிய உணவுக்கு பிறகு, சிறிது நடப்பது செரிமானத்தை அதிகரிக்கும்.