நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோகியத்திற்கு சிறந்தது..!
நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட நமது குடலில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் இருப்பது அவசியம். இவை குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, நம் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் அத்தியாவசியமானது.
'புரோபயோடிக்' எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள், செரிமான மண்டலத்தில் இருப்பது, உணவிலிருந்து சத்துக்கள் முழுமையாக உறிஞ்சுவதற்கு உதவும்.
நன்மை தரும் பாக்டீரியாக்கள் பெருக, நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
செரிமான மண்டலத்தால் நார்ச்சத்தை செரிக்க முடியாது. நல்ல பாக்டீரியாக்கள், இதை சாப்பிடும்.
அப்படி சாப்பிட முடியாத பட்சத்தில், உடலின் உள்செயல்பாடுகளுக்கு பல விதங்களில் பலன் தரக்கூடிய கொழுப்பு அமிலமாக மாற்றி விடும்.
தயிர், இட்லி மாவு, பழைய சோறு போன்ற புளிக்க வைத்த உணவுகளில், நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
பருப்பு வகைகள், பீன்ஸ், பட்டாணி, ஓட்ஸ், உமி நீக்கப்படாத தானியம் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நமது குடலில் உள்ள ஒரு முக்கிய ஆரோக்கியமான பாக்டீரியா வளர்ச்சிக்குத் தேவையான பொருட்கள் வெங்காயம் மற்றும் பூண்டில் நிறைந்துள்ளன.
மைதா மாவு, கொழுப்பு, வெள்ளை சர்க்கரை அதிகம் உள்ள உணவை தொடர்ந்து சாப்பிடும் போது, அது கெட்ட பாக்டீரியா பெருக உதவி செய்கிறது. அதனால் அதை தவிர்க்கவும்.
ஆன்டி பயாட்டிக் மருந்துகளை முடிந்த வரை தவிர்க்கவும். இதை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை கொல்லக்கூடும்.