குழந்தைகளை தரையில் விளையாட விடுங்க.. இதுதான் எர்த் தெரபி...!
கிரவுண்டிங் (அ) எர்த்திங் (earth therapy) என்பது ஒரு சிகிச்சை முறையாகும். இது பூமியுடன் மீண்டும் இணைப்பதன் மூலம் உங்கள் மின் ஆற்றலை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துகிறது.
இது பூமியிலிருந்து வரும் மின் அலைகள் உங்கள் உடலில் எவ்வாறு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என புவியியல் அறிவியல், அடிப்படை இயற்பியல் மூலம் வெளிப்படுத்துகிறது.
வெறுங்காலில் மண் தரையில் சிறிது தூரம் நடக்கும் போதோ அல்லது உட்காரும் போதோ வலி, மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே, புல், மணல் என எந்த தளமாக இருந்தாலும் சரி... உங்களின் சருமத்தை இயற்கையான நிலத்தை தொட அனுமதிப்பதால் அடித்தள ஆற்றலைப் பெறலாம்.
தரையில் படுப்பதன் மூலம் உங்கள் சருமத்துக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை இன்னும் அதிகரிக்கலாம்.
எனவே, ஏதாவதொரு பார்க்கில் புற்களின் மீதோ அல்லது கடற்கரை மணலிலோ படுக்கலாம். மேலும், தண்ணீரிலும் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
இதனால், பூமியுடன் நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. எனவே, இயற்கையுடன் இணைய குழந்தைகளை இப்போதிருந்தே பழக்குவோம்.
தினமும் அரைமணி நேரமாவது கிரவுண்டில் மணலில் கால்கள் படர குழந்தைகளை விளையாட விடுங்கள். இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.