இன்று தேசிய தடுப்பூசி தினம்
காசநோய், போலியோ, அம்மை, கொரோனா உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்களை தடுப்பூசியால் வெல்ல முடிந்தது.
இந்தியாவில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நம் நாட்டில் 1995 மார்ச் 16ல் முதன்முறையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதையொட்டி அதன்பின் ஆண்டுதோறும் மார்ச் 16 ஆம் தேதி, தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்கப்படுகிறது
மேலும் தடுப்பூசி செலுத்துவதில் சுகாதார ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
தடுப்பூசியின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அதை பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு தளமாக இத்தினம் இருக்கிறது.