பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் அறிய சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய புதிய சிப்!
சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனிதர்களுக்கு பாக்டீரியா தாக்கத்தால் காய்ச்சல் ஏற்படும்போது, மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பரிந்துரை செய்வர்.
அவற்றை நோயாளிகள், இரண்டு நாட்களிலேயே நிறுத்திக் கொள்வதால், அந்த பாக்டீரியாவுக்கு, அந்த மருந்துக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
அடுத்த 2 நாட்களில், அதே பாக்டீரியாவால் காய்ச்சல் ஏற்படும்போது, அதே மருந்தை எடுத்துக் கொண்டால், குணமாகாது. அதன்பின், மிகவும் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை எடுக்க நேரிடும்.
இதற்கு, அந்த பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, 'கல்ச்சர் டெஸ்ட்' முடிவுகள் வெளிவர, மூன்று நாட்களாகும்.
இதை கருத்தில் வைத்து, பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறனை விரைவாக கண்டறிய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், சிறுநீரை செலுத்தும்போது, அதில் உள்ள எலக்ட்ரோடில் இருந்து வெளியேறும் மின்சாரம் காரணமாக, பாக்டீரியாக்கள் தனியே பிரியும். அவை வளர, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க முடியும்.
மேலும், நோய் எதிர்ப்பு திறன் மருந்தையும் வழங்கபடும். மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் வேலை செய்தால், பாக்டீரியா அழிந்துவிடும், வேலை செய்யவில்லை எனில், பாக்டீரியா வளர்ச்சி அடையும்.
இதை புதிய சிப் வழியே, மூன்று மணி நேரத்தில் கண்டு பிடித்து விடலாம். மருத்துவர்களும், சரியான சிகிச்சையை பரிந்துரைக்க முடியும் என கூறப்படுகிறது.
காப்புரிமை கிடைத்ததும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்துடன் இணைந்து, விலை குறைவான புதிய 'சிப்'பை வணிகமயமாக்க நடவடிக்கை எடுக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.