மருந்துகளின் பக்கவிளைவு அறிய மருந்தகங்களில் இனி கியூ.ஆர்., கோடு
நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மருந்து பாதுகாப்பு செயல்பாடுகளை வலுப்படுத்துமாறு, கடந்த ஜூனில் இந்திய மருந்து நிறுவன கண்காணிப்பு திட்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அதில், மருந்துகளின் பக்க விளைவுகளை பொதுமக்கள் அறிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு சில்லரை மற்றும் மொத்த விற்பனை மருந்தகத்திலும், மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, கியூ.ஆர்., குறியீட்டை முக்கிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.
அதை தங்கள் மொபைல் போனில், 'ஸ்கேன்' செய்தால், அந்த மருந்தின் பக்கவிளைவு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
அனைத்து மாநிலங்களிலும் மருந்தகங்களில், கியூ.ஆர்., குறியீடு மற்றும் உதவி எண்களை காட்சிப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.