இன்று பிரதோஷம்... சிவ வழிபாடு மகிழ்ச்சியான வாழ்வு தரும் !

பிரதோஷ தினத்தில் தான் சிவன் ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது.

பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.

சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம்.

பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர்.

பிரதோஷத்தில் நந்தி தேவரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும்.

பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது.

இன்று சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.