இன்று இந்திய ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம் என்பது ஒரு உன்னதமான பணியை மேற்கொள்ளும் சுயநலமற்ற ஆசிரிய பணியாளர்களுக்காக கொண்டாடப்படும் விழா ஆகும்.
இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர்.
அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையில் உயர்வதற்கு கல்வியே சிறந்த வழி. மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும்ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது.
ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது.
தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும்.
இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்களை உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.