மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க..

தேர்வு காலத்தில், சாப்பிடும் உணவே மாணவர்களின் மூளையை கூர்மையாக அல்லது மழுங்க வைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தயிருடன் பழம் மற்றும் வறுத்த விதைகள் சாப்பிட, அவை குடலின் நலன் மற்றும் மூளை வளத்தை அதிகரிக்கும்.

வாழைப்பழம் மற்றும் பாதாம் பால் சேர்த்து சாப்பிட, மூளைக்கு சுறுசுறுப்பை தரும்.

வாழைப்பழம் மனநிலையை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். அதற்கு காரணம் அதிலுள்ள வைட்டமின் பி6.

'புளுபெர்ரி' பழம் மற்றும் பூசணி போன்றவற்றின் வறுத்த விதைகளில், ஞாபக சக்தியை அதிகரிக்கும், மெக்னீசியம் மற்றும் துத்தநாக சத்து நிறைந்துள்ளது.

படிக்கும் போது , தேர்வுக்கு முன் 'டார்க் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வேகமாக நினைவு கூடுதல், அதிக கவனம் மற்றும் மன அழுத்தம் குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கொண்டை கடலை மற்றும் நிலக்கடலை போன்றவற்றை, 'சாலட்'களில் கலந்து, 'ஸ்நாக்'ஸாக சாப்பிட, அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து கவனச் சிதறலை தவிர்க்க உதவுகின்றன.