பொது சிவில் சட்டம்: முக்கிய அம்சங்கள் அறிவோமா!!
பொது சிவில் சட்டம், நாட்டிலேயே முதலாவதாக உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று அமலுக்கு வந்தது. யு.சி.சி., முக்கிய அம்சங்கள் குறித்து அறிந்துக்கொள்வோம்.
திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்து பங்கீட்டில் அனைத்து மதத்தினருக்கும் இந்த சட்டமே பொருந்தும். பட்டியலின பழங்குடியினருக்கு மட்டும் விதிவிலக்கு
அவரவர் மத சம்பிரதாயத்துக்கு ஏற்ப திருமணம் செய்யலாம். ஆனால், 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாவிட்டால், அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும்.
பொது சிவில் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்தால் ஆறு மாதம் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் 'லிவ்- இன்' முறை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் திருமண தம்பதி போல, முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.
திருமணம் செய்யாமலே வாழும் ஜோடிக்கு பிறக்கும் குழந்தை, சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படும்.
ஒரு மாதத்துக்கு மேலாக லிவ்- இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள், அதை பதிவு செய்யாவிட்டால், அபராதம், சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.