ரயில் நிலையங்களில் இனி எடை கட்டுப்பாடு !

விமான நிலையங்களில் பின்பற்றப்படும் எடை விதிமுறையை, முக்கிய ரயில் நிலையங்களில் பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நெரிசலை குறைத்தல், அமரும் இடங்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றை எளிதாக்கும் வகையில் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி, 'ஏசி' முதல் வகுப்பு பயணியர், 70 கிலோ வரையிலான உடைமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம்.

'ஏசி' 2ம் வகுப்பில் 50 கிலோ, 'ஏசி' 3ம் வகுப்பு, படுக்கை வசதி பயணியர் 40 கிலோ, பொதுப் பெட்டிகளில் பயணிப்போர் 35 கிலோ லக்கேஜை கட்டணமின்றி எடுத்து செல்லலாம்.

அமரும் இடத்தை அடைக்கும் அளவுக்கு எடையுள்ள பொருட்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பெரிய பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முடியாது.

கூடுதலாக உள்ள உடைமைகளை, பயணத்தைத் துவங்கும் முன்னரே லக்கேஜ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.