தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம்! உலக தாய்ப்பால் வாரம் ( ஆக. 1 - 7)
தாய்மை ஒரு வரம் என்றால், தாய்ப்பால் கொடுப்பது வரப்பிரசாதம். பிறந்த குழந்தை அழுகையை நிறுத்திய அடுத்த சில நிமிடங்களில், தேடுவது அன்னையின் தாய்ப்பாலைத்தான்.
தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது.
இடைவெளியை தவிர்த்தல்: அனைவருக்கும் தாய்ப்பால் என்பது இந்தாண்டு மையக்கருத்து.
குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் அன்புடன் கொடுக்க வேண்டும்.
ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்பால் வழங்கலாம்.
தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது, குழந்தைக்கு மட்டுமல்லாமல்; தாயின் உடல்நலனுக்கும் சிறந்தது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், தாய்க்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கலாம்.