மரங்கள்... இயற்கை தந்த வரங்கள்! இன்று உலக வன தினம்!
காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பூமியை பாதுகாத்து வரும் பசுமை போர்வையாம் காடுகள் பற்றியும் அதன் வளம் காப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகத்திற்கு தேவையான மழையையும், சுத்தமான காற்றையும் வழங்குவதில் காடுகளின் பங்கு மிக மிக முக்கியமானது.
காடு என்பது பல்வேறு உயிரினங்கள் ஒன்றிணைந்து அமையப்பெற்ற ஓர் சுழல் மண்டலமாகும்.
ஒரு மரமானது தன் சராசரி ஐம்பது வருட வாழ்நாளில் ஆறாயிரம் பவுண்ட் ஆக்சிஜனை வெளியிடுகிறதாம்.
இதில் வெப்பமண்டல காடுகள் மட்டும் மனிதன் மட்டுமின்றி கிட்டத்தட்ட பூமியின் 50 சதவீதம் உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளது.
உலகமே சந்திக்கும் முக்கிய பிரச்னையான பருவநிலை மாற்றதிற்கு காடுகள் அழிவதும் தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொண்டு வனங்களை பாதுக்காப்போம்!