97 சிறிய சிகரங்களில் இலவசமாக ஏற அனுமதி... நேபாள அரசு அறிவிப்பு

நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 29,031 அடி உயரத்திலுள்ளது.

இந்த சிகரத்தில் ஏற ஒருவருக்கு, ரூ.10 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது செப்., 1 முதல், ரூ. 13 லட்சமாக அதிகரிக்கிறது.

இந்நிலையில், மலை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் குறைவான உயரமுடைய, 97 சிகரங்களில் இலவசமாக ஏறலாமென, நேபாள அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, கர்னாலி, சுதுர்பாஷ்சிம் மாகாணங்களில், 19,000 முதல், 23,000 அடி உயரம் வரையுள்ள, 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம்; இதற்கு கட்டணம் கிடையாது.

தொலைதுாரப் பகுதிகளுக்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளூர்வாசிகளுக்கு வருமானத்தை ஈட்டுவதே இதன் நோக்கமாகும்.

இந்த முயற்சி நேபாளத்தின் ஆராயப்படாத மலைத்தொடர்களை மேம்படுத்தவும் உதவும்.

உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன், குறைந்த உயரமுடைய சிகரத்தில் ஏறியிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.