சளி இருந்தால் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடலாமா?

சளி, இருமல் இருப்பவர்கள், தயிரை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தயிரை, இரவில் தனியாக அப்படியே சாப்பிடுவதால் சளியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் என்பதால் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில், மோராக பருகலாம்.

பகல் நேரத்தில் சாப்பிடும் போது, சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்தும், இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம்.

இதனால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, வயிறும் குளிர்ச்சியடையும்.

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து பச்சடி போன்று செய்து சாப்பிடலாம். தயிரை மோர் குழம்பாக சமைத்தும் சாதத்துடன் சாப்பிடலாம்.