தனியாக இருக்கும் முதியோர் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மொபைல் போன் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். அவசர உதவி எண்களை பதிவு செய்து, அதை பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.
உங்கள் பிரச்னை, டாக்டர் பெயர், தொடர்பு எண் போன்றவற்றை எழுதி தெரியும் படி சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும்.
ஸ்மார்ட் வாட்ச், ஆக்சிஜன் அளவு தெரிவிக்கும் சாதனங்களை பயன்படுத்த தெரிந்து இருப்பது கூடுதல் சிறப்பு.
மருந்துகளை எப்போதும் ஒரே இடத்தில், சரியாக ஒழுங்குபடுத்தி வைக்க பழகிக்கொள்ளுங்கள்.
காலை, மாலை, இரவு, அவசர நேரங்களில் என பிரித்து, பார்ப்பவர்களுக்கு தெரியும்படி வையுங்கள்.
வீடுகளின் அருகில் உள்ள நபர்களுடன், பேசி பழக வேண்டியது அவசியம்.
ஒரு சிலருடன் தினந்தோறும் பேசும் பழக்கம் ஏற்படுத்தி விடுங்கள். உங்களுக்கு முடியாமல் போகும் நேரம் உதவிக்கு ஓடி வருவார்கள்.
மன அழுத்தம் தவிர்க்க யோகா, ஆன்மிக பயணம், சுற்றுலா, நண்பர்களுடன் அரட்டை என்று உங்களை, பிசியாக வைத்துக்கொள்ளுங்கள்.
முடியாத நிலையில் பெரியோர் உள்ள வீடுகளில், கீழே விழுந்தால் உதவிக்கு பெல், சென்சார் செட்அப் செய்துவைக்கலாம்.