மூட்டு தேய்மான பிரச்னையா? அறுவை சிகிச்சை கை கொடுக்குமா? 
        
 வயதாகும் போது மூட்டுகள் தேய்வது இயல்பு. ஆனால், குறிப்பிட்ட வயதிற்கு முன்னரே ஏன் தேய்மானம் ஆரம்பிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். 
        
 பெண்களை அதிகம் பாதிக்கும் முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு பிரதானமாக மரபியல் காரணி இருக்கலாம். 
        
 இது தவிர, உணவு, உடல் பருமன், உடற்பயிற்சி யின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் பிற காரணிகள். 
        
  கடந்த பல ஆண்டுகளாக நவீன வாழ்க்கை முறை மாற்றத்தால் 50 வயதிற்கு முன்பே முழங்கால், மூட்டு தேய்ந்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.   
        
நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை காலையில் செய்தால், அன்று மாலையே நடக்கலாம்.  
        
 அடுத்த நாள், பிசியோதெரபி உதவியுடன் மாடிப்படிகளில் ஏறலாம். மூன்றாவது நாள் வீட்டிற்கு சென்று விடலாம். முழுமையாக குணமடைய மூன்று, நான்கு வாரங்களாகும் என கூறப்படுகிறது. 
        
 இந்த நாட்களிலும் முழு ஓய்வில் இருக்க வேண்டியதில்லை. சுய வேலைகளை தாங்களே செய்யலாம். நான்கு வாரங்களுக்கு பின் இயல்பாக இருக்க முடியும். 
        
  பிரச்னை இருப்பவர்களுக்கு அவரவரின் காலின் தன்மைக்கு ஏற்ப, சிலிக்கான் ரப்பரால் பிரத்யேகமாக செய்த காலணிகளை டாக்டரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.