இன்று ஐ.நா., சபை தினம்
ஐ.நா., சபை (1945 அக். 24) தொடங்கி இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இது உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஈடுபடுகிறது.
இதன் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக். 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதல் உலகப் போர் நடந்த போது, அத போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக்கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர்.
அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.
இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. என்பதற்காக 1945 ஏப்., 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது.
அதன் விளைவாக ஐ.நா., சபை 1945 அக்.24ல் தோற்றுவிக்கப்பட்டது. ஐ.நா., தொடங்கப்பட்டபோது 51 உறுப்பு நாடுகள் இருந்தன. தற்போது 193 நாடுகளாக உயர்ந்துள்ளன.