எண்ணிலடங்காத நன்மைகள் கொண்ட வாட்டர் ஆப்பிள்!
தண்ணீர் ஆப்பிளில் வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய், மூட்டுவலி போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.
மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. தண்ணீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது.
தண்ணீர் ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இவை உடலை நோய் தொற்றுகளிலிருந்து காத்திடும். அதுமட்டுமின்றி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கிடும்.
மது மற்றும் புகைப் பழக்கம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும்.
இப்பழம், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கிறது.
தண்ணீர் ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவுகிறது. இதன்மூலம், இதயம் சம்பந்தப்பட்ட மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளைக் குறைக்கும்.