மீண்டும் தொடருது... 27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா!
கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா வைரஸ்.
இதன் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டியது. இன்றளவும் ஒரு சில நாடுகளில் கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க துவங்கியுள்ளது.
ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிரிட்டன், டென்மார்க், அமெரிக்கா உட்பட 27 நாடுகளில் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.
உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
xec கொரோனா திரிபு தாக்கினால், மற்ற வகை பாதிப்பின் போது ஏற்படும் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும்.
புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.