இன்று சர்வதேச ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல் தினம்!

ஐ.நா., சார்பில் ஆக.31ல் சர்வதேச ஆப்ரிக்கர்களை பாதுகாத்தல் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் ஆப்ரிக்க மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களுக்கு எதிரான இனவெறியை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இத்தினம் வலியுறுத்துகிறது.

மேலும் ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும், மரபுகளையும் கொண்டாட உதவுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்ரிக்க வம்சாவளியினர் வாழ்கின்றனர்.

ஆப்ரிக்க நாடுகளை தவிர்த்து அதிகபட்சமாக பிரேசிலில் 9 கோடி பேர் வசிக்கின்றனர்.

இதற்கடுத்து அமெரிக்காவில் 5 கோடி பேர், ஹைதியில் ஒரு கோடி பேர் வாழ்கின்றனர்.

இத்தினம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அவர்களுக்குள்ள இடத்தை அங்கீகரிப்பதற்கும் உதவுகிறது