பீட்ரூட் உண்பதால் இவ்வளவு பிரச்னை குணமாகுமா!!

தலை நரை வர காரணம், வைட்டமின், 'கே' சத்து குறைவு தான். பீட்ரூட்டில் வைட்டமின், 'கே' சத்து மிகுந்த அளவில் உள்ளது. பீட்ரூட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, இளநரை மறையும்.

பீட்ரூட் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் நோய் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

உதட்டில் வரக்கூடிய வெடிப்பை தவிர்க்க, பீட்ரூட் சாறு மருந்து போல் செயல்படும்.

பீட்ரூட் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

பீட்ரூட் சாற்றில் சிறிது கிளிசரின், தேன், லைம் ஆயில் ஐந்து சொட்டுகள் கலந்து, பஞ்சில் தொட்டு உதட்டில் ஒற்றி ஒற்றி எடுக்கவும். ஒரு வாரத்தில் உதடுகள் கருமை நிறம் மாறி விடும்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரை கலந்து பூசி வர, பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலில் புதிதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.