நீரிழிவு பாதிப்புக்கு கருப்பட்டி நல்லது...
பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.
நீரிழிவு பாதிப்புக்கு கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும். மேனி பளபளப்படையும்.
இதில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இதனால் கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்கள், எலும்புகள் உறுதியாகும்
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
குழந்தை பெற்ற பெண்கள், சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும். சுக்கு, கருப்பட்டி, பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க, கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து, சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.